Skip to main content

சில விடியல்களின்...

சுகங்கள்...




கதிரவனே நான்தான் என்னும் சில விடியல்கள்
காப்பிகோப்பையுடன் பால்கனியில் சில விடியல்கள்
கனவுகளின் தாக்கத்துடன் சில விடியல்கள்

தூக்கம் சுகம் என்னும் சில விடியல்கள்
தூக்கம் கெட்டு தலைவலியுடன் சில விடியல்கள்

முன்றைய நாளின் முறைப்புகளுடன் சில விடியல்கள்
மனக் கசப்புகளுடன் சில விடியல்கள்

புரியாத உணர்வுகளுடன் சில விடியல்கள் 
புரியவைக்கும் முயற்சிகளுடன் சில விடியல்கள்
புன்சிரிப்பை எதிர்பார்த்து சில விடியல்கள்

விடியுமா என்ற கேள்விக்குறியுடன் சில விடியல்கள்
விடிந்தால்தான் உண்டு என்று சில விடியல்கள்

இன்று விடிந்தது எப்படி என்று இன்றே பார்போம்...


Comments

  1. இன்று புதிதாய்ப்ப் பிறந்தோம் என்கிற
    பாரதியின் செவ்வரிகளை நினைவுறுத்திப் போகும்
    அருமையான பதிவு
    ஒரே நதி நீரில் இருமுறை குளிக்க
    எவருக்கும் சாத்தியமில்லை என்பது போல
    இன்றைய காலைப் பொழுதைவாழ் நாளில்
    என்றும் சந்திக்க சாத்தியமில்லை தானே ?
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. // ஒரே நதி நீரில் இருமுறை குளிக்க
      எவருக்கும் சாத்தியமில்லை என்பது போல
      இன்றைய காலைப் பொழுதைவாழ் நாளில்
      என்றும் சந்திக்க சாத்தியமில்லை தானே ?///

      உண்மைதான்....இன்றைய பொழுது இன்றைக்கு மட்டும்தானே....

      Delete
  2. இன்றைய விடியல் இன்றோடு - நித்தம் வரும் வித விதமாக விடியல்கள்,.... சரியா சொன்னீங்க சகோ

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொரு விடியலும் ஒவ்வொரு நாளும் நம்முள் ஒவ்வொரு விதமான பாதிப்பை ஏற்படுத்துகிறது.நன்றி...

      Delete
  3. கம்மாக் கரையில் காத்துவாங்க குளிச்ச விடியலைத் தேடுகிறேன் சகோ . அருமை .

    ReplyDelete
    Replies
    1. லிஸ்ட்ல சேர்த்திருவோம் சசி....

      Delete
  4. எல்லோருக்குமான நல்லதொரு மனமகிழ்ச்சியான விடியல் கொஞ்சம் கஷ்டம்தான். முந்தைய இரவின் சோகம் விடியும்போது சிலருக்கு மறக்கவும் செய்யும். அழகான விடியல் கிடைக்க பழசெல்லாம் மறந்தால்தான் உண்டு.

    ReplyDelete
    Replies
    1. தினமும் இன்பமான விடியல் கிடைத்தால் நன்றாகத்தான் இருக்கும்...நன்றி விச்சு...

      Delete
  5. மிக ரசித்தேன்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே....

      Delete
  6. அகில் இதே வலை வேட் பிறெஸ்லும் உள்ளதா? நான் ஒரு கருத்துப் போட்டேனே , அது அங்கே உள்ளதா?. நல்ல கரு உள்ள கவிதை. நல்வாழ்த்து. சகோதரி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. same vedha.....thanx...

      Delete
    2. நல்ல விடியலை எதிர்பார்க்கும் அழகான கவிதை. பாராட்டுக்கள்.

      Delete
    3. நன்றி கோபாலகிருஷ்ணன் அவர்களே...

      Delete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

  சீமாட்டி | அகிலா  Click to buy the Book புத்தகம் வாங்க புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்)  ஆசிரியர் : அகிலா  உரை :  பொள்ளாச்சி அபி   என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி'  கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி  சீமாட்டி | உரை  ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது. இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த தவ்வை, அறவி  என இரண்டு நாவல்கள், மி