Skip to main content

மகிழ்ச்சி.....

           பகிர்வதில்தான் உள்ளது......




                என் பதிவுலக நண்பரான ரமணி அவர்கள் தனக்கு கிடைத்த 'லீப்ச்டர்' என்கிற இளம் வலைபதிவர்களுக்கு வழங்கும் ஜெர்மானிய விருதினை ஒரு அங்கீகாரத்தை தனக்கு பிடித்த ஐந்து வலைப்பூக்களுக்கு பகிர்ந்து அளித்திருக்கிறார். அதில் என் வலைப்பூவும் ஓன்று என்பதில் மகிழ்ச்சிதான். நண்பர் ரமணிக்கு என் நன்றிகள்.....


                  மேலும் இந்த விருதின் அடையாளமே இதை மேலும் ஐவருக்கு பகிர்ந்தளிப்பதுதான். எனக்கு பிடித்தமான ஐந்து இளம் வலைப்பூக்களுக்கு (200 உறுப்பினர்களுக்கு குறைவாக உள்ள வலைப்பூக்கள் ) பகிர்வதில் ஆனந்தம் அடைகிறேன்....அவர்களும் இதை ஐந்து பதிவர்களுக்கு பகிர்ந்தளிப்பதன் மூலம் அதிகமான வலைப்பூக்கள் அறிமுகபடுத்தபடுகிற வாய்ப்பும் அமைகிறது. இந்த விருதின் விதிக்கு ஏற்ப, ஐந்து இளம் பதிவர்களுக்கு வழங்கிடுமாறு தங்களை கேட்டுக்கொள்கிறேன்.


அவர்கள் இவர்கள்தான் :


திரு மயில்வாகனா அவர்களின் முல்லைவனம் 


ஆதிமனிதன் அவர்களின் ஆதிமனிதன் 


உத்தமபுத்திரா அவர்களின் தமிழ்க்கவிதைகள் 


நூர் முகமது அவர்களின் நம்ம ஊர் 


பாபு நடேசன் அவர்களின் தமிழ் அறிவு கதைகள் 



Comments

  1. விருதினை ஏற்றுக் கௌரவித்தமைக்கும்
    விருதினை தரமான பதிவர்களைத் தேர்ந்தெடுத்துப்
    பகிர்ந்து கொண்டமைக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்குதான் நான் கடமைப்பட்டிருக்கிறேன்.....
      இந்த விருது என்ற ஒன்றை என் கையில் கொடுத்து எனக்கும் பதிவுலகில் ஒரு பொறுப்புணர்ச்சியை ஏற்படுத்தியதற்கு.....நன்றி ரமணி அவர்களே....

      Delete
  2. Replies
    1. நன்றி ரத்னவேல் ஐயா அவர்களுக்கு.....

      Delete
  3. விருது பெற்றமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கீதமஞ்சரி.....

      Delete
  4. விருது பெற்ற தங்களுக்கும்
    தங்கள் கையால் விருது கிடைக்கப்பெற்றவர்களுக்கும்
    என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி மகேந்திரன்.....

      Delete
  5. அன்பு தோழி அகிலாவுக்கு...!
    என் படைப்புகளை மதித்து எனக்கும் விருதினை பகிர்ந்தளித்தமைக்கு மிக்க நன்றி - மேலும் நல்ல படைப்புகளை படைக்க தூண்டுகோலாய் இருக்கும் உங்களுக்கு என் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்

    ReplyDelete
  6. என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழி .................................

    ReplyDelete
    Replies
    1. நன்றி பிரபாகரன்....

      Delete
  7. என் படைப்புகளை மதித்து எனக்கும் விருதினை பகிர்ந்தளித்தமைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  8. நன்றிகள் தோழி. நட்பு வட்டத்தைப் பெருக்கும் அங்கீகார விருதைப் பகிர்ந்து கொண்டமைக்கும் மேலும் புதிய திறமையாளர்களை நட்பு வட்டத்தில் இணைக்க உதவும் இந்த விருதிற்கும் உள்ளார்ந்த நன்றிகள்.

    விருதினைப் பகிர்ந்து கொள்ளும் அளவில் எமது பதிவு தங்களின் கவனத்தைப் பெற்றமைக்கு மிக்க மகிழ்ச்சி.

    இறை அருளோடு தங்கள் வாழ்வும் வளமும் சிறக்கவும், உங்களின் பதிவுகள் மேலும் சிறக்கவும் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

  சீமாட்டி | அகிலா  Click to buy the Book புத்தகம் வாங்க புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்)  ஆசிரியர் : அகிலா  உரை :  பொள்ளாச்சி அபி   என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி'  கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி  சீமாட்டி | உரை  ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது. இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த தவ்வை, அறவி  என இரண்டு நாவல்கள், மி