Skip to main content

இதயம்.....


காலி இல்லை........



art by me......




சின்ன சின்ன பூக்களில் சிதறி கிடக்கும் காதல்

பட்டாம்பூச்சியின் சிறகுகளில் படபடக்கும் காதல் 

வானவில்லின் வண்ணங்களில் தெளித்திருக்கும் காதல் 


கடற்கரை ஓரங்களில் களித்திருக்கும் காதல் 

கோவில் சிலைகளில் சித்திரமாய் காதல் 

கவிஞர்களின் கற்பனையில் காவியமாய் காதல்
 

அனைத்து இடங்களிலும் காதல் 

அவளின் இதயத்தை தவிர...









Comments

  1. நறுக்கென்ற வரிகளில் மனதில் தைத்தது கவிதை! காதலின் ஏக்கத்தைச் சொன்ன விதம் அருமை!

    ReplyDelete
  2. நேசமான உள்ளத்தில் வாசம் தேடும்
    அழகிய கவிதை.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கு நன்றி மகேந்திரன்....

      Delete
  3. காதலுக்கு இடமே இல்லை என்பதற்கும்
    இடம் காலியில்லை என்பதற்கும்
    வேறு வேறு பொருளில்லையா ?
    காதலுக்கு அனுமதியில்லை என்பதுவும்
    ஏற்கெனவே நிரப்பப்பட்டுவிட்டது என்பதுவும்
    வேறு வேறு இல்லையா ?
    கணேசன் சார் குழப்புகிறாரா
    நான் குழப்புகிறேனா ?
    காதல் இருக்குமிடங்களாக நாம்
    நம்பிக் கொண்டிருப்பவைகளை அழகாகச் சொல்லி
    இருக்க வேண்டிய இடத்தில் இல்லையெனச் சொல்லிப் போன
    முரண் எனக்கு மிகவும் பிடித்திருந்தது
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. இருவருமே குழம்பதேவையில்லை.....தலைப்பில்தான் சற்று குழப்பம்......நன்றி உங்களின் வருகைக்கும் கருத்துக்கும்......

      Delete
  4. படம் வரைந்தது நீங்கள் என
    திரும்ப பின்னூட்டம் படிக்க வருகையில்தான் கவனித்தேன்
    அருமை அருமை.வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரமணி அவர்களே.....

      Delete
  5. இருக்கவேண்டிய இடத்தில் இல்லாது, எங்கெங்கோ நிறைந்திருக்கிறது காதல். என்னத்தை சொல்ல? தாங்கள் வரைந்திருக்கும் படத்தைப்போலவே கவிதையும் அழகு.

    ReplyDelete
    Replies
    1. உண்மை....
      வேண்டும்போதும் அமையாது.....
      தேடும்போதும் அமையாது...
      என்ன காதலோ இது.....

      நன்றி கீதமஞ்சரி....

      Delete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

  சீமாட்டி | அகிலா  Click to buy the Book புத்தகம் வாங்க புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்)  ஆசிரியர் : அகிலா  உரை :  பொள்ளாச்சி அபி   என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி'  கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி  சீமாட்டி | உரை  ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது. இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த தவ்வை, அறவி  என இரண்டு நாவல்கள், மி