Skip to main content

இந்திய சமுகம்

ஆண்களில் பல வகையானவர்கள் உண்டு. பல ஆண்கள் தன் இனத்திற்கே உரியதான ஆண் என்கிற கர்வத்தோடும் பெருமிதத்தோடும் நடந்து கொள்வார்கள். இவர்களால் பெண்களுக்கு என்றுமே தீராத துன்பம்தான்.


சிலர் பல சமயங்களில் தான் ஆண் என்கிற மிதப்போடும் சில சமயங்களில் மிதமாகவும் நடந்துக்கொள்வார்கள். இந்த மாதிரியான ஆண்களால் சில நேரங்களில் பெண்கள் சிரமப்பட்டாலும் பல நேரங்களில் தன் சுய புத்தியோடு நடந்து குடும்பத்தினருக்கு நிம்மதியை தருவார்கள்.


வெகு சில ஆண்கள் மட்டுமே மிகுந்த சிரத்தையோடு வாழ்க்கையை அணுகுவார்கள். பெண்களுக்கு வீட்டில் மரியாதையை கொடுப்பார்கள். அவர்களிடமும் யோசனை கேட்டு நடப்பார்கள். பெண்களையும் தன்னை மாதிரி ஒரு உயிருள்ள அறிவான ஜீவனாக நினைப்பார்கள். இவர்களால் தான் அவ்வப்போது சாவின்  விளிம்பிற்கு தள்ளப்படும் பெண் சமுதாயம் உயிர்ப்பிக்கிறது.


நம் இந்திய சமுதாயம் ஆண்களை சார்ந்தே இயங்குகிறது. இன்னும் பல தலைமுறைகள் கடந்தால்தான் நம் சமுதாயம் இருபாலரையும் சார்ந்து இயங்கும். அது வரையிலும் பெண்கள் அடங்கித்தான் போக வேண்டும் என்பது கட்டாயமல்ல. ஆனால் அனுசரித்து போக வேண்டியது கட்டாயம். 


நகரத்தில் வாழும் பெண்கள் எல்லா உரிமைகளும்  தங்களுக்கு கிடைத்துவிட்டதாக தம்பட்டம் அடித்து கொள்கிறார்கள். அதை பார்த்து கிராமத்தில் இருக்கும் பெண்கள் தத்தம் குடும்பங்களில் அதிகாரம் பண்ண நினைக்கிறார்கள். அவர்கள் வாழும் சூழல் வேறு, நாம் வாழும் சூழல் வேறு என்பதை புரிய தவறிவிடுகிறார்கள்.

தன் வீட்டு ஆண்களை அதிகமாக தலையில் தூக்கி வைத்து ஆடாமல் அவர்களையும் வீட்டில் உள்ள சிறு சிறு வேலைகளை பார்க்கும்படி பழக்கபடுத்த வேண்டும். 'என் பையன் எனக்கு மட்டும் தான் வேலை செய்வான். அவனுக்கு வரும் மனைவிக்கு எல்லாம் செய்யமாட்டான்' என்று பேசும் தாய்மார்கள் கவனிக்கவும். வேலை செய்து பழகியவன் யாராய் இருந்தாலும் உதவி செய்வான். பெண்கள்தான் பெண்களுக்கு பெரும் எதிரி. இதை ஆண்கள் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கிறார்கள்.

Comments

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

  சீமாட்டி | அகிலா  Click to buy the Book புத்தகம் வாங்க புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்)  ஆசிரியர் : அகிலா  உரை :  பொள்ளாச்சி அபி   என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி'  கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி  சீமாட்டி | உரை  ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது. இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த தவ்வை, அறவி  என இரண்டு நாவல்கள், மி