Skip to main content

புதுவருட கொண்டாட்டங்கள்

கவனமாக கொண்டாடவும் 



மும்பையில் நேற்று நடந்த ஒரு தீவிபத்தில் 14 பேர் இறப்பு என்று இன்றைய செய்திதாள் வாசித்தது. ஒரு சாலை விபத்தில் இருவர் இறந்தால் கூட கவனமாக ஏன் ஓட்டுவதில்லை என்னும் கவலை தொற்றிக்கொள்ளும் போது, இந்நிகழ்வு பெரிதாய் மனதுள் வருத்தம் தராதது போல் இருந்தது.

காரணம் அந்த செய்தியின் தலைப்பிலேயே இருந்தது, விபத்து நடந்த இடம் 'Pub', அப்புறம் அது ஒரு நள்ளிரவு கடந்த 'Birthday Party' என்பதுமாக இருக்கலாம்.

Pub, Party என்பதெல்லாம் நம் கலாசாரத்திற்கு தேவைதானா என்ற கேள்வியும் அதன் தொடர்ச்சியாய் தோன்றும் அதில் பங்கேற்கும் மனிதர்கள் மேல் நமக்கு ஏற்படும் ஒட்டாத தன்மையும் ஆகும்.

கோவில்களில் விசேஷ நாட்களில் கூடும் கூட்டத்தில் ஏற்படும் நெருக்கடியால் மிதிபட்டு (Stampede ) ஏற்படும் உயிர் இழப்புகள், புது பட ரிலீஸ் அன்று டிக்கெட்டு எடுக்க உண்டாகும் நெரிசலில் நேரும் இழப்புகள் இப்படி எத்தனை.. 2015 யில் மெக்கா புனித தளத்தில் நெரிசலில் இறந்த 2000 உயிர்கள் இன்னும் உலகத்தின் நினைவில் நிற்கும்..

மனிதர்கள் அதிகமாய் கூடும் இடங்களில் ஏற்படும் இம்மாதிரியான உயிர் இழப்புகள் ஒரு பெரிய சங்கடம்தான். தேவையற்ற இடங்களில் நம் இருப்பை நிலைநிறுத்த வேண்டிய அவசியங்களை குறைக்கவேண்டும். அதிக ஜனத்தொகை உள்ள நம் இடங்களில் பாதுகாப்பு என்பது மிக பெரிய கேள்விக்குறிதான்.

இதையும் ஒரு சாதாரண தீ விபத்தாய் என்னால் கடந்திருக்க முடியும். மனதில்லை. இது ஒரு பிறந்தநாள் கொண்டாட்டம்.


இன்னும் ஒரு நாளில் பிறக்கவிருக்கும் புது வருட கொண்டாட்டங்கள், மது இல்லாமலே கடற்கரையில் குழந்தைகளுடன் இரவை கொண்டாடும் இப்புதிய தலைமுறை மக்கள் ( போன வருடம் பார்த்தோம் தொலைகாட்சியில்), அதிலும் மது அருந்திவிட்டு பெண்களுடன் நடத்தும் சில்மிஷங்கள் (அதையும் பார்த்தோம், அப்பெண்களும் கண்டுகொள்ளாததை) மனதுக்குள் ஒரு பயத்தைத் தருகின்றன, நாம் எங்கு போகிறோம் என்பதை நினைத்து.

இதில் உனக்கென்ன என்று மட்டும் கேட்டுவிடாதீர்கள். பெரியவர்கள் மிதமிஞ்சியவர்கள். அவர்கள் குறித்து சொல்ல என்னிடம் ஏதுமில்லை. ஆனால் குழந்தைகளை இம்மாதிரியான நள்ளிரவு தாண்டிய கேளிக்கைகளுக்கு இழுத்துச் செல்லாதீர்கள். உயிர் இழப்பின் பயங்கரம் ஒரு புறம், வேண்டாத ஒரு கலாசாரத்தை முன்னிலைபடுத்துவதன் அபாயம் மறுபுறம்.

புது வருடத்தை அமைதியாக வரவேற்றாலும் கூட அது ஒன்றும் கோபித்து கொள்ளாது என்று நினைக்கிறேன்.

Celebrate Safe..


~ அகிலா..

Comments

  1. அர்த்தமுள்ள பதிவு உண்மை குழந்தைகளுக்கு ஏன் அதற்க்குள் கலாசார மாற்றத்தை அறிமுக படுத்தப்பட வேண்டும். பெரியவர்களும் ஏன் கால் மாறி நிற்க வேண்டும். உண்மை கோவிலில் கூட தவிர்க்க பட வேண்டிய இடமே மக்கள் வெள்ளத்தை குறைக்க கடவுளையும் கஷ்ட படுத்தாமல் இருக்கலாம்.

    ReplyDelete
  2. மிக நல்லதொரு பதிவு.... நானும் கூட்டங்களை தவிர்த்துவிடுவேன் ,,,சில பேருக்கு இப்படி கூட்டமுள்ள இடங்களுக்கு சென்று கத்தி மகிழ்வதுதான் சந்தோஷம் என நினைத்து கொள்கிறார்கள். இங்கே வசிக்கும் நாங்கள்(10 குடும்பங்கள்) எல்லோரும் யாராவது ஒரு வீட்டிற்கு சென்று புத்தாண்டை கொண்டாடி மகிழ்வோம். புத்தண்டு மட்டுமல்ல தீபாவளி பொங்கல் கிறிஸ்துமஸ் தேங்க்ஸ்கிவிங்க் என்று மாறி மாறி ஒவ்வ்வொருவிட்டிலும் வைத்து கொண்டாடுவோம்

    ReplyDelete
  3. ஒருதடவை இந்தியா வந்த போது திருப்பதி சென்றோம் அங்குள்ள கூட்ட நெரிசலை பார்த்து அனுபவைத்த பின் இனிமேல் பாலாஜி வேண்டுமென்றால் எங்களை தேடி வரட்டும் நாங்கள் அவரை தேடி அங்கு செல்வதில்லை என்ரு முடிவு செய்துவிட்டோம் அதன் பின் பெரிய கொவில்களுக்கு செல்வதை விட சிறு கோயிலுக்கு சென்று வருகிறோம்

    ReplyDelete
  4. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் அட்வான்ஸ் புத்தாண்டு தின நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. தங்கள் கருத்தை வரவேற்கிறேன்
    அருமையான கண்ணோட்டம்

    இந்தப் புத்தாண்டு இனிய புத்தாண்டாய்
    எந்த உறவுக்கும் அமைய வேண்டுமென
    அந்த இறைவனை வேண்டி நிற்கிறேன்!

    ReplyDelete
  6. ஆதங்கமான பரிவுரைகள் நிறைந்த பதிவு. எனக்கும் இந்த பயம் (எல்லாம் நல்ல விதமாக முடிய வேண்டுமே என்ற ஒரு பதட்டம்) பொது நிகழ்ச்சிகளில் எனக்கு உண்டாகும். எனது உளங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு – 2018 நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. உண்மை அம்மா....‌‌‌‌‌‌வரிகளுக்கு உயிர் வந்துவிட்டது

    ReplyDelete
  8. Great article with excellent idea i appreciate your post thankyou so much and let keep on sharing your stuffs


    Digital marketing agency in chennai
    Best SEO Services in Chennai
    seo specialist companies in chennai
    Best seo analytics in chennai
    Expert logo designers of chennai
    Brand makers in chennai

    ReplyDelete
  9. Aside from the welcome bundle, Ignition’s different major bonus is the weekly match reload bonus, which you'll be able to|which you'll} claim if you make any subsequent deposits through the week. $1 to $300 tables, $10 to $1,500 tables, and $3,000-plus tables. Roulette tournaments begin each day, they usually include large prize pools and unlimited rebuys. The UK Gambling Commission is the one authority that may concern licenses to remote playing 온라인카지노 operators that offer services to residents of Great Britain. • FAIR PLAY GUARANTEED – Our licensed Random Number Generator gives you one of the best and fairest roulette expertise.

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் | கட்டுரை

Feminist Ideologies in Short Story Literature (நவம்பர் 8, 2023 அன்று அரசு கலைக்கல்லூரி, சித்தூர், கேரளாவில்  நடைபெற்ற கருத்தரங்கில் நிகழ்த்திய உரை) அண்மை தமிழிலக்கியம்: படைப்பும் வாசிப்பும் சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் ஆய்வுரை: து அகிலா  எழுத்தாளர், மனநல ஆலோசகர் கோயம்புத்தூர் சிறுகதை இலக்கியமும் பெண்ணியக் கோட்பாடும் காலம்காலமாய் சொல்லப்பட்டு வரும் கதை இலக்கியம், புனைவுலகை நம் முன் கொண்டுவரும் ஒன்று. கதை சொல்பவர்களால் நெடுங்கதைகளாகதான் அவை சொல்லப்பட்டு வந்தன. பெருங்காதைகள் எல்லாம் செய்யுள்களாக சங்க இலக்கியத்தில் மலர்ந்துள்ளன. படிநிலை வளர்ச்சியாக கதை மரபானது, நாட்டாரியல் வாய்மொழி கதைகளையும், பஞ்சதந்திரக் கதைகளையும், விக்கிரமாதித்தன் கதைகளையும், ஈசாப் நீதிக்கதைகளையும் நம்முன் வைத்தபடியே வளர்ந்து வந்தது எனலாம். சிறுகதை இலக்கியம் வாய்மொழி இலக்கியத்திலிருந்து எழுத்துமொழிக்கும் அச்சுமொழிக்கும் வந்த பிறகுதான் அவற்றின் வாசிப்புத்தளம் அதிகப்பட்டுப் போனது.   சிறுகதை இலக்கியத்தில் கருத்தியல் நிலைப்பாடுகள் மானுடவியல், தத்துவம், சமூகவியல், அரசியல், பெண்ணியம், நவீனத்துவம், விளிம்புந